செய்திகள்

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Published On 2018-09-14 10:17 GMT   |   Update On 2018-09-14 10:17 GMT
தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால், விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #PMModi #EdappadiPalaniSwami
சென்னை:

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலக்கரி இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால், ஒரு நாள் மின் உற்பத்திக்கு தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News