செய்திகள்

பெரியகுளம் பகுதியில் பாதுகாப்பில்லாத ஏ.டி.எம் மையங்கள்

Published On 2018-09-12 10:14 GMT   |   Update On 2018-09-12 10:14 GMT
பெரியகுளம் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது.
பெரியகுளம்:

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வடுகபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மையங்களுக்கு காவலாளிகள் கிடையாது.

மேலும் ஏ.டி.எம் மையத்தில் மின் விளக்குகள் எரியாததால் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கையில், வடுகபட்டி தனியார் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லாததால் மர்மநபர்கள் தங்கும் இடமாக மாறிவருகிறது.

இவர்கள் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீடு எண்ணை பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால் வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக உள்ளதா? என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்பக்க கண்ணாடியை சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து பலமுறை வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அபராதம் பிடிக்கும் வங்கி நிர்வாகம் ஏ.டி.எம். மையங்களை முறையாக பராமரிக்க முன்வருவதில்லை. எனவே உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
Tags:    

Similar News