செய்திகள்
ஆனந்தி

திருமண நாளில் கணவர் கோவிலுக்கு அழைத்து செல்லாததால் மனைவி தற்கொலை

Published On 2018-09-12 09:08 GMT   |   Update On 2018-09-12 09:08 GMT
திருமுல்லைவாயலில் திருமண நாளில் கணவர் கோவிலுக்கு அழைத்து செல்லாததால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநின்றவூர்:

திருமுல்லைவாயில் செந்தில் நகர். பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஆனந்தி என்கிற மோகனவள்ளி (வயது 39). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 10-ந்தேதி அவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் ஆகும். அன்று கோவிலுக்கு செல்ல ஆனந்தி, கணவரை வற்புறுத்தினார். ஆனால் அவர் அழைத்து செல்லவில்லை.

மேலும் கணவர் தேவானந்தன் திருமண நாள் வாழ்த்து சொல்லாததாலும் ஆனந்தி மிகவும் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் தேவானந்தனும், அவரது தந்தையும் வேலூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்தகொள்ள சென்று விட்டனர்.

வீட்டில் ஆனந்தியும், அவரது மாமியாரும் இருந்தனர். கணவரின் செயலால் மனவேதனை அடைந்த ஆனந்தி நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் ஆனந்தி எழுதி வைத்திருந்த 7 பக்க உருக்கமான கடித்தத்தை கைப்பற்றினர்.

அதில் கணவர் தேவானந்தன், மாமனார், மாமியார் மீது குற்றம்சாட்டி உள்ளார். மேலும் தன்னை கணவர் வெளியில் எங்கும் அழைத்து செல்லவில்லை என்று உருக்கத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News