செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்ததையடுத்து மேட்டூர் அணையில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்தது. இதனால் நீர்வரத்து சற்று அதிகரித்து இன்று விநாடிக்கு 6 ஆயிரத்து 136 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 6 ஆயிரத்து 47 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 89 கன அடி அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.38 அடியாக இருந்தது. இன்று காலை 117.55 அடியாக சரிந்தது. #tamilnews
மேட்டூர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்தது. இதனால் நீர்வரத்து சற்று அதிகரித்து இன்று விநாடிக்கு 6 ஆயிரத்து 136 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 6 ஆயிரத்து 47 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 89 கன அடி அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.38 அடியாக இருந்தது. இன்று காலை 117.55 அடியாக சரிந்தது. #tamilnews