செய்திகள்

கோவை அருகே திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2018-09-11 11:57 GMT   |   Update On 2018-09-11 11:57 GMT
கோவை அருகே திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஒ விசாரணை நடத்தி வருகிறார்.
கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள இடையார்பாளையம் சிவாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் பெங்களூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி மஞ்சுளா தேவி (23). இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது

மஞ்சுளாதேவி மாமியார் மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமியார் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை மஞ்சுளாதேவி சரியாக கவனிக்கவில்லை என்று உறவினர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மஞ்சுளாதேவி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் மஞ்சுளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நடத்தி கூருகின்றனர்.

திருமணம் நடந்து 3 வருடங்கள் மட்டும் ஆவதால் ஆர்.டி.ஒ விசாரணையும் நடந்து வருகிறது. மஞ்சுளா தேவியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News