செய்திகள்

நாளை பந்த்: மனித நேய மக்கள் கட்சி ஆதரவு

Published On 2018-09-09 17:21 GMT   |   Update On 2018-09-09 17:21 GMT
மத்திய அரசுக்கு எதிராக நாளை நடக்கும் போராட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்:

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும, ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெட்ரோல் டீசலின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் மத்திய பா.ஜனதா அரசு வேடிக்கை பார்த்து வருவது வேதனைக்குரியது. எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை மாற்றியமைக்கும் நடை முறை கொண்டு வரப்பட்டதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, நமது நாட்டில் குறைக்காமல், அதன் முழுபயனை மக்களுக்குத் தராமலும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து மத்திய பாரதீய ஜனதா அரசு.

தற்போது சர்வதேச பிரச்சினைகளால் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது.

மத்திய அரசின் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க கோரியும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் நாளை நாடு தழுவிய அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News