செய்திகள்

தேவாரத்தில் மாமனாரை உருட்டு கட்டையால் தாக்கிய மருமகன்

Published On 2018-09-08 10:56 GMT   |   Update On 2018-09-08 10:56 GMT
தேவாரம் அருகே மாமனாரை உருட்டு கட்டையால் தாக்கிய மருமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி:

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.மேட்டுப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). இவரது மகள் வெண்ணிலாவுக்கும், ரமேஷ் (31) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மனோகரன் தனது மகளை சமாதானம் செய்து வைத்துள்ளார்.

சம்பவத்தன்று மனோகரன் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது ரமேஷ் தனது மனைவி வெண்ணிலாவை தரக்குறைவாக பேசி தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனை மனோகரன் தட்டிக் கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் உருட்டுக் கட்டையால் மனோகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தேவாரம் போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News