செய்திகள்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மதுரை மத்திய ஜெயிலில் இருந்து 68 கைதிகள் விடுதலை
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து 68 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRcentenaryfunction
மதுரை:
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்ய அரசு முடிவு எடுத்தது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 7-வது கட்டமாக 68 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பெண் கைதியும் ஒருவர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து 6 கட்டமாக 100 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 68 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். #MGRcentenaryfunction