செய்திகள்

புழல் ஜெயிலில் இந்திய மக்கள் முன்னணி பிரமுகர் உண்ணாவிரதம்

Published On 2018-09-07 09:09 GMT   |   Update On 2018-09-07 09:09 GMT
அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்கு போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புழல் ஜெயிலில் இந்திய மக்கள் முன்னணி பிரமுகர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்:

திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சாலமோன். இந்திய மக்கள் முன்னணி மாநில அமைப்பாளராக உள்ளார். ஒரு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த அவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் சாலமோன் இன்று காலை முதல் சாப்பிட மறுத்தி திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்கு போடுவதற்கு எதிர்ப்புதெரிவித்து  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறி உள்ளார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News