செய்திகள்

கூரியர் வேன் மீது கண்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி

Published On 2018-09-06 12:58 GMT   |   Update On 2018-09-06 12:58 GMT
கூரியர் வேன் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேப்பனஅள்ளி:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது35). டிரைவரான இவர் நேற்று கண்டெய்னர் லாரியில்  மோட்டார் உதிரி பாகங்கனை ஓசூரில் இருந்து சென்னைக்கு ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். 

சப்படி என்ற பகுதி அருகே போகும் போது முன்னால் சென்ற கூரியர் வேன் மீது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரி வந்து மோதியது. பின்னால் வந்த மற்றொரு டிப்பர் லாரியும் அடுத்தடுத்து மோதியது. இதில் கண்டெய்னர் லாரி டிரைவர் சண்முகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த சண்முகத்தை மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News