செய்திகள்
நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலை பாதியில் நிறுத்தி பயணிகள் போராட்டம்
2 மணி நேரம் கால தாமதம் வந்த நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலை பாதியில் நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:
கோவை- நாகர்கோவில் இடையே தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தினசரி காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்று சேரும், இதே போல நாகர்கோவிலில் தினசரி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கோவைக்கு வந்து சேரும். இந்த ரெயிலில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்பட ஏராளமானோர் தினசரி சென்று வருகின்றனர்.பாசஞ்சர் ரெயில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினசரி 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை கால தாமதமாக வந்து சேர்வதாக புகார் எழுந்தது. இதனால் இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.
நேற்று காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் இருந்து புறப்பட்ட பாசஞ்சர் ரெயில் 2 மணி நேரத்துக்கு மேலாக கால தாமதமாக வந்து கொண்டு இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயில் இருகூர் அருகே வந்து கொண்டு இருந்த போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள், போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் ரெயில் அங்கு இருந்து 1 மணி நேரம் கால தாமதமாக புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு கோவைக்கு வந்து சேர்ந்தது. #tamilnews
கோவை- நாகர்கோவில் இடையே தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தினசரி காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்று சேரும், இதே போல நாகர்கோவிலில் தினசரி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கோவைக்கு வந்து சேரும். இந்த ரெயிலில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்பட ஏராளமானோர் தினசரி சென்று வருகின்றனர்.பாசஞ்சர் ரெயில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினசரி 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை கால தாமதமாக வந்து சேர்வதாக புகார் எழுந்தது. இதனால் இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.
நேற்று காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் இருந்து புறப்பட்ட பாசஞ்சர் ரெயில் 2 மணி நேரத்துக்கு மேலாக கால தாமதமாக வந்து கொண்டு இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயில் இருகூர் அருகே வந்து கொண்டு இருந்த போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள், போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் ரெயில் அங்கு இருந்து 1 மணி நேரம் கால தாமதமாக புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு கோவைக்கு வந்து சேர்ந்தது. #tamilnews