செய்திகள்

மேட்டுப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

Published On 2018-09-04 10:09 GMT   |   Update On 2018-09-04 10:09 GMT
வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டியில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி:

வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டியில் பொது இடங்களில் அமர்ந்து பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர்கள் கோபால், சுந்தரராஜன் மற்றும் போலீசார், மேட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பட்டி குடிநீர் தொட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரன் (25), ஞானசேகரன் (24), மோகன்ராஜ் (22). சுரேஷ்(30), ராமசாமி (60) மற்றும் மணிவேல்(20), அருள் (27), மணிகண்டன்(22), ராஜ்குமார் (20) ஆகிய ஒன்பது பேரை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த ரொக்கப்பணம் ரூ. 270 மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News