செய்திகள்

புழல் ஜெயிலில் 10 செல்போன் - கஞ்சா பறிமுதல்

Published On 2018-09-03 09:45 GMT   |   Update On 2018-09-03 09:45 GMT
புழல் ஜெயிலில் சிறைத்துறை உளவுப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இடம் அருகே கழிவறை பகுதியில் 10 செல்போன்கள், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செங்குன்றம்:

புழல் ஜெயில் இன்று காலை சிறைத்துறை உளவுப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. ஜீவானந்தம், இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் 6 போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இடம் அருகே கழிவறை பகுதியில் 10 செல்போன்கள், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஜெயிலுக்குள் செல்போன்கள், கஞ்சா வந்தது எப்படி? சிறைக்காவலர்கள் இதற்கு உதவினார்களா? என்று விசாரித்து வருகிறார்கள். புழல் ஜெயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைதிக்கு கஞ்சா கடத்திய சிறைக்காவலர் ஒருவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News