செய்திகள்

பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Published On 2018-08-29 11:13 GMT   |   Update On 2018-08-29 11:13 GMT
பேராவூரணி அருகே மோட்டர் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி:

பேராவூரணி அடுத்த பாந்தங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி கமலம் (வயது 55). இவர் இன்று காலை கடை தெருவிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருமுருகன் விளார் அரங்கம் அருகே அவர் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கமலம் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமலம் இறந்து விட்டார்.

இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News