செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்- டிரைவருக்கு வலைவீச்சு

Published On 2018-08-27 09:39 GMT   |   Update On 2018-08-27 09:39 GMT
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மணல் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடிவருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:

திருவெண்ணைநல்லூரை அடுத்த கரடிபாக்கத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் விழுப்புரம் மணல் கடத்தல் தடுப்பு குற்றபிரிவு போலீசார் அந்த பகுதியில் கண்காணித்து வந்தனர்.

அப்போது கரடிபாக்கம்- சென்னை சாலையில் அதிவேகமாக மினிலாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த லாரியை வழிமறித்தனர். இதைப்பார்த்த டிரைவர் சற்று முன்னதாக மினிலாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த மினிலாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மணல் கடத்திய மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News