செய்திகள்
போலீஸ் பணிக்கான வயது வரம்பு 24-ஆக உயருகிறது - புதுவை அரசு முடிவு
காவலர் பணிக்கான வயது வரம்பை 24-ஆக உயர்த்த புதுவை அரசு முடிவு எடுத்து உள்ளது. ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.
புதுச்சேரி:
புதுவை போலீஸ் துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் துறை தலைமையகம் 2 தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.
உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. போலீஸ் பணிக்கு பிளஸ்-2 கல்வித்தகுதி, 22 வயது உச்சவரம்பு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து போலீஸ் பதவிக்கு தேர்வு நடப்பதால் வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காவலர் பணிக்கான வயது வரம்பை 24 என்று உயர்த்த அரசு முடிவு எடுத்து உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவின்பேரில் புதுவை போலீஸ் தலைமையக அதிகாரிகள் இதற்கான கோப்புகளை தயார் செய்து தலைமைச்செயலாளர் அஸ்வனிகுமாருக்கு அனுப்பி வைத்தனர். ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.
புதுவை போலீஸ் துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் துறை தலைமையகம் 2 தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.
உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. போலீஸ் பணிக்கு பிளஸ்-2 கல்வித்தகுதி, 22 வயது உச்சவரம்பு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து போலீஸ் பதவிக்கு தேர்வு நடப்பதால் வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காவலர் பணிக்கான வயது வரம்பை 24 என்று உயர்த்த அரசு முடிவு எடுத்து உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவின்பேரில் புதுவை போலீஸ் தலைமையக அதிகாரிகள் இதற்கான கோப்புகளை தயார் செய்து தலைமைச்செயலாளர் அஸ்வனிகுமாருக்கு அனுப்பி வைத்தனர். ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.