search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயது வரம்பு உயர்வு"

    காவலர் பணிக்கான வயது வரம்பை 24-ஆக உயர்த்த புதுவை அரசு முடிவு எடுத்து உள்ளது. ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.
    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் துறை தலைமையகம் 2 தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

    உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. போலீஸ் பணிக்கு பிளஸ்-2 கல்வித்தகுதி, 22 வயது உச்சவரம்பு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து போலீஸ் பதவிக்கு தேர்வு நடப்பதால் வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காவலர் பணிக்கான வயது வரம்பை 24 என்று உயர்த்த அரசு முடிவு எடுத்து உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவின்பேரில் புதுவை போலீஸ் தலைமையக அதிகாரிகள் இதற்கான கோப்புகளை தயார் செய்து தலைமைச்செயலாளர் அஸ்வனிகுமாருக்கு அனுப்பி வைத்தனர். ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #TNPSC #Group1
    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை  சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் வெளியிட்டார். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கான வயது வரம்பு 35-ல் இருந்து 37 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு 30-ல் இருந்து 32 ஆகவும் உயர்த்தப்படும் என அறிவித்தார்.



    இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. #TNPSC #Group1
    ×