search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Age Limit Increases"

    காவலர் பணிக்கான வயது வரம்பை 24-ஆக உயர்த்த புதுவை அரசு முடிவு எடுத்து உள்ளது. ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.
    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் துறை தலைமையகம் 2 தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

    உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. போலீஸ் பணிக்கு பிளஸ்-2 கல்வித்தகுதி, 22 வயது உச்சவரம்பு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து போலீஸ் பதவிக்கு தேர்வு நடப்பதால் வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காவலர் பணிக்கான வயது வரம்பை 24 என்று உயர்த்த அரசு முடிவு எடுத்து உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவின்பேரில் புதுவை போலீஸ் தலைமையக அதிகாரிகள் இதற்கான கோப்புகளை தயார் செய்து தலைமைச்செயலாளர் அஸ்வனிகுமாருக்கு அனுப்பி வைத்தனர். ஓரிரு நாளில் வயது வரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.

    ×