செய்திகள்

திருச்சி அருகே விளம்பர பதாகையினை சரி செய்தவர் தவறி விழுந்து பலி

Published On 2018-08-20 11:12 GMT   |   Update On 2018-08-20 11:12 GMT
திருச்சி அருகே விளம்பர பதாகையினை சரி செய்தவர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி (வயது 62). இவரது உறவினர் ஒருவர் கோட்டை பகுதியில் தட்டச்சு பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் ஒரு அடுக்குமாடி வளாகத்தின் 2-வது மாடியில் உள்ளது.

அங்குள்ள விளம்பர பதாகையினை தட்சிணாமூர்த்தி சரி செய்துள்ளார். அப்போது திடீரென தவறி விழுந்துள்ளார். அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News