செய்திகள்

நாகமலை புதுக்கோட்டை அருகே 2 வாலிபர்களுக்கு பீர்பாட்டில் குத்து

Published On 2018-08-20 08:32 GMT   |   Update On 2018-08-20 08:32 GMT
நாகமலை புதுக்கோட்டை அருகே முன்விரோத தகராறில் 2 வாலிபர்களை பீர்பாட்டிலால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை:

நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள சம்பக்குடியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் வினோத்குமார் (வயது32). இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (23), குமார் (27) வழிமறித்து தகராறு செய்தனர். அவர்கள் பீர்பாட்டிலால் குத்தியதில் வினோத்குமார் மற்றும் கார்த்திக் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி குமார், முருகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News