செய்திகள்
பூந்தமல்லி அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
பூந்தமல்லி அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜோசப், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகளான கரையான்சாவடி பகுதியில் கஞ்சா விற்ற நசீர், சிலம்பரசன் ஆகியோரும் பிடிபட்டனர். கைதானவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.