செய்திகள்
கோவில்பட்டியில் பறந்தவாறு சாலையில் கடக்க முயன்ற ஆண் மயில் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பலியானது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி- கடலையூர் ரோடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் நேற்று காலையில் ஒரு ஆண் மயில் பறந்தவாறு சாலையை கடக்க முயன்றது. அப்போது அது அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து கீழே விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி வனச்சரகர் சிவராம் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று, இறந்த மயிலை எடுத்து சென்று, கால்நடை ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதனை குருமலை வனப்பகுதியில் புதைத்தனர்.
கோவில்பட்டி- கடலையூர் ரோடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் நேற்று காலையில் ஒரு ஆண் மயில் பறந்தவாறு சாலையை கடக்க முயன்றது. அப்போது அது அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து கீழே விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி வனச்சரகர் சிவராம் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று, இறந்த மயிலை எடுத்து சென்று, கால்நடை ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதனை குருமலை வனப்பகுதியில் புதைத்தனர்.