செய்திகள்

திருமங்கலத்தில் தம்பதி வளர்க்க வாங்கிய 10 நாளே ஆன பெண் சிசு பலி- போலீசார் விசாரணை

Published On 2018-08-16 14:37 GMT   |   Update On 2018-08-16 14:37 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் சிசு பரிதாபமாக இறந்தது.

மதுரை:

திருமங்கலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 10 நாட்களே ஆன பெண் சிசு ஒன்றை வளர்ப்பதற்காக வாங்கிச் சென்றனர்.

அந்த பெண் சிசுவுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தையை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, பெண் சிசு பரிதாபமாக இறந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மதுரை கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி சுருளி ஆண்டவன் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News