செய்திகள்

கம்பைநல்லூர் அருகே பால்வியாபாரி மர்ம மரணம் - போலீசார் விசாரணை

Published On 2018-08-14 06:49 GMT   |   Update On 2018-08-14 06:49 GMT
கம்பைநல்லூர் அருகே பால்வியாபாரி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே பெரியகவுண்டம்பட்டி ஆற்று பாலத்தின் கீழ் பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி டைந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

உடனே இது குறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தருமபுரி, அரியகுளம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பது தெரியவந்தது. அவரது உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அண்ணாமலையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அண்ணாமலை மனைவி போலீசில் கணவர் சாவில் மர்மம் உள்ளது என்று புகார் கொடுத்தார்.

அப்போது அவரது மனைவி கூறியதாவது:-

தருமபுரி, அரியகுளம் அண்ணாநகரில் ஆவின் பாலகம் நடத்தி வந்தார். மேலும் தட்டு சீட்டும், ஏலச்சீட்டு நடத்தி வந்தார். நேற்றிரவு 10 மணிக்கு ஒருவர் எனது கணவர் அண்ணாமலையை ஒருவர் அழைத்து சென்றார்.

பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் நானும் எனது உறவினரும் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் தேடினோம். ஆனால் அவர் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று காலை பெரியகவுண்டம்பட்டி அருகே உங்களது எனது கணவர் அண்ணாமலை இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது என்று கூறினார்.

சீட்டுபணம் தருவதில் தகராறு ஏற்பட்டு அடித்து கொன்றனர்களா? அல்லது முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நேற்றிரவு அண்ணாமலையை அழைத்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Tags:    

Similar News