செய்திகள்

கோவை பேரூரில் 10-ம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்

Published On 2018-08-13 16:11 GMT   |   Update On 2018-08-13 16:11 GMT
கோவை பேரூரில் 10-ம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை பேரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன் அஸ்வின் ராஜ் (15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் படுத்து தூங்கினார். இன்று அதிகாலை 5 மணிக்கு அவரை பெற்றோர் எழுப்பினார்கள். அப்போது மாணவர் அஸ்வின் ராஜ் உடலில் எந்த அசைவும் இல்லை.

உடனே அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். மாணவர் அஸ்வின் ராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் தர்மபுரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (45). இவர் தனது நண்பர் சாமிக்கண்ணுவுடன் கடந்த 11-ந் தேதி கோவை அருகே உள்ள வெள்ளிங்கிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

இருவரும் மலை ஏறி சென்றனர். 1-வது மலையை கடந்த போது சாமிக்கண்ணு தன்னால் நடக்க முடியவில்லை. மேலும் கால நிலை மாற்றம் உள்ளது என கூறி கீழே இறங்கி விட்டார்.

கார்த்திக் மட்டும் மலை ஏறி சென்றார். அவர் வெள்ளிங்கிரி மலையில் சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினார். 6-வது மலையில் வரும் போது கடும் குளிர் நிலவியது.

குளிரில் நடுங்கி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலாந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கார்த்திக் உடலை மீட்டு கோவை அர சு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News