செய்திகள்

முதல்வரை மாற்றும் விஷயத்தில் ஆளுநர் முடிவெடுக்க முடியாது- தகுதி நீக்க வழக்கில் முதலமைச்சர் தரப்பு வாதம்

Published On 2018-08-13 10:47 GMT   |   Update On 2018-08-13 10:47 GMT
முதல்வரை மாற்றும்படி 18 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க முடியாது என்று முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். #18MLAsCase #MLAsDisqualificationCase #MadrasHC
சென்னை:

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதையடுத்து, இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா விசாரித்து வருகிறார்.

இந்நிலையில், தகுதி  நீக்க வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய வாதத்தின்போது முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.


‘முதல்வருக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா? என ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை 18 பேரும் ஏற்படுத்தி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக்கொடுத்து விட்டதாகவே கருத முடியும். முதல்வரை மாற்றக்கோரி 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க முடியாது’ என முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். #18MLAsCase #MLAsDisqualificationCase #MadrasHC
Tags:    

Similar News