செய்திகள்

தஞ்சையில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

Published On 2018-08-13 10:27 GMT   |   Update On 2018-08-13 10:27 GMT
தஞ்சையில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள கரந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (வயது 57). இவர் நேற்று தஞ்சை ராஜாராம் மடத்து தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து ஜான்சிராணி தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்த திருடர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற தஞ்சை வடக்கு வாசலைச் சேர்ந்த முனியப்பன் மகன் மணிகண்டன் (25), ரமேஷ் மகன் சூரியகுமார் (20) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் ஜான்சி ராணியிடம் செயின் பறித்ததாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News