செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

Published On 2018-08-11 03:19 GMT   |   Update On 2018-08-11 03:19 GMT
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. #MinisterJayakumar
அடையாறு:

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தொண்டர்கள் அமைச்சர் வீடு அருகே ஏதும் போராட்டம் நடத்தினால், அதை சமாளிக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர் வீட்டுக்கு செல்லும் சாலையில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. #MinisterJayakumar
Tags:    

Similar News