செய்திகள்

கருணாநிதி மரணம்- அதிர்ச்சியில் தி.மு.க. பிரமுகர் பலி

Published On 2018-08-08 07:23 GMT   |   Update On 2018-08-08 07:23 GMT
திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை கேட்ட அதிர்ச்சியில் ஆரணி திமுக பிரமுகர் உயிரிழந்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
ஆரணி:

ஆரணி சத்யா நகரை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 75) மூங்கில்கூடை பின்னும் தொழிலாளி. தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று காலை முதல் கருணாநிதியின் உடல்நிலையை தெரிந்து கொள்ள டி.வி. பார்த்துகொண்டிருந்தார். மாலை 6.45 மணிக்கு கருணாநிதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்ட நரசிம்மன் அப்படியே கீழே படுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.

கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது. நரசிம்மனுக்கு கிளியம்மாள், கனகாம்பாள் என்ற 2 மனைவிகளும், 3 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
Tags:    

Similar News