செய்திகள்

வட சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளராக பெரம்பூர் மகேஷ் நியமனம்

Published On 2018-08-06 08:43 GMT   |   Update On 2018-08-06 08:43 GMT
வட சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளராக பெரம்பூர் ஆர்.மகேஷை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நியமித்துள்ளனர். #ADMK
வில்லிவாக்கம்:

வட சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளராக பெரம்பூர் ஆர்.மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்துள்ளனர். மேலும் கழக நிர்வாகிகள் பெரம்பூர் மகேசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படியும் கேட்டு கொண்டுள்ளனர். பெரம்பூர் மகேஷ் வட சென்னை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்.

இவரது மனைவி ஜெயஸ்ரீ மகேஷ் 70-வது வார்டு கவுன்சிலராக பணியாற்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். #ADMK

Tags:    

Similar News