செய்திகள்

சேலம் அருகே ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட 18 குட்கா மூட்டைகள் பறிமுதல்

Published On 2018-08-04 06:05 GMT   |   Update On 2018-08-04 06:05 GMT
சேலம் அருகே அதிரடி சோதனையில் ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட 18 குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருப்பூர்:

பெங்களுரில் இருந்த கோவைக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு செந்தில்நாதனுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் நாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், தலைமை காவலர் பாலதண்டாயுதம் ஆகியோர் கருப்பூர் சோதனை சாவடிக்கு சென்று அங்கு வரும் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது பெங்களுரில் இருந்து கோவைக்கு இரண்டு ஆம்னி பஸ்கள் வந்தது. பஸ்சை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பஸ்சில் 6 மூட்டைகளும், மற்றொரு பஸ்சில் 12 மூட்டைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 18 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 2 பஸ் டிரைவர்களையும் பயணிகளை இறக்கி விட்டு, விட்டு காலையில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பறிமுதல் செய்யபட்ட குட்கா மூட்டைகளை சூரமங்கலம் போலீசில் நிலையத்தில் வைத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

Tags:    

Similar News