செய்திகள்

திருவட்டார் அருகே டெம்போவில் மணல் கடத்தியவர் கைது

Published On 2018-08-01 13:48 GMT   |   Update On 2018-08-01 13:48 GMT
திருவட்டார் அருகே டெம்போவில் திருட்டுத்தனமாக மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த டெம்போவை பறிமுதல் செய்தனர்.
திருவட்டார்:

திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு மணல் கடத்தல் தொடர்பாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. திருவட்டார் அருகே மூவாற்று முகம் ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாகவும் போலீசார் உடனே அங்கு சென்றால் மணல் கடத்தல் காரர்களை பிடித்துவிடலாம் என்றும் தகவல் கொடுத்தவர் கூறினார்.

இதைதொடர்ந்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் மூவாற்று முகத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஆற்றில் ஒரு டெம்போ நின்று கொண்டிருந்தது. அதில் மணலும் கடத்துவதற்காக ஏற்றிக் கொண்டிருந்தனர். உடனே போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.

மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட திருவட்டாரை சேர்ந்த ஜாண்ரோஸ் என்பவரை கைது செய்தனர். அவரது டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News