செய்திகள்

தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கண்டனம்

Published On 2018-07-30 09:45 GMT   |   Update On 2018-07-30 09:45 GMT
தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சுக்கு என்.கே.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran

நாமக்கல்:

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான என்.கே.பி. ரவிக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. தினகரனின் வளர்ச்சியை தாங்க முடியாமல் சிலர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

இது போன்று செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடும் அவரை யாரும் வீழ்த்த முடியாது. தொடர்ந்து நாங்கள் அவரின் வழியில் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News