நிலக்கோட்டை அருகே எரியாத மின்விளக்குகளால் பொதுமக்கள் அச்சம்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி, கோட்டூர், பச்சமலையான் கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்டு 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தெருவிளக்குகள் ஊராட்சி நிர்வாகத்தின் தகவலின்பேரில் மின்சார ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.
தற்போது மின்வாரிய அதிகாரிகளுக்கும், ஊராட்சி செயலாளர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வருகிறது. இதனால் தெருவிளக்குகள் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது.
கிராமங்களில் பெரும் பாலான இடங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக உள்ளதால் பல இடங்களில் இருள்சூழ்ந்தே காணப்படுகிறது. இதனால் இரவுநேரங்களில் அப்பகுதியை கடந்துசெல்ல பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இருளை சாதகமாக பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவிடுவார்களோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே தெருவிளக் குகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். #electriclight