செய்திகள்
லாலாபேட்டை அருகே ஆடு திருடிய 3 பேர் கைது
லாலாபேட்டை அருகே 2 ஆடுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டை அருகே உள்ள சித்தலாவாய் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு சொந்தமான 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரனையில் மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த தங்கதுரை(22) கம்மநல்லூரை சேர்ந்த சுரேஷ் (24) விஜய் (24) ஆகியோர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.