செய்திகள்

கொல்லிமலை அருகே விபசார அழகிகள் கைது

Published On 2018-07-23 16:49 GMT   |   Update On 2018-07-23 16:49 GMT
கொல்லிமலை அருகே போலீசார் தனியார் விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது விபசார அழகிகளை கைது செய்தனர்.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே சிக்கு பாறை பகுதியில் தணியார் லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் கடந்த சில மாதங்களாக விபசாரம் நடப்பதாக வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நள்ளிரவு இன்ஸ்பெக்டர் செல்வரஜ் தலைமையில் தனியார் விடுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது 2-க்கும் மேற்பட்ட அறையில் விபச்சார அழகிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து தனியார் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் பிரேமானந்த் (வயது 36) என்பவரை வாழவந்தி போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News