செய்திகள்

லாஸ்பேட்டையில் வீடு புகுந்து நகை- பணம் திருட்டு

Published On 2018-07-23 12:01 GMT   |   Update On 2018-07-23 12:01 GMT
லாஸ்பேட்டையில் வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். #Robberycase

புதுச்சேரி:

லாஸ்பேட்டை கொட்டுபாளையம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). எலக்ட்ரீசியன் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. ஆசிரமத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சுரேஷ் நேற்று குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்த அவர் வீட்டின் வெளிக்கதவு வாசல் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு பீரோ கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்க பணம், 10 பவுன் நகையை காணவில்லை.

இதனால் பதட்டம் அடைந்த சுரேஷ் இது குறித்து கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்து வந்து சோதனை நடத்தி நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். #Robberycase

Tags:    

Similar News