செய்திகள்

திருவையாறு அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2018-07-22 10:15 GMT   |   Update On 2018-07-22 10:15 GMT
திருவையாறு அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Sandrobbery

திருவையாறு:

திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை மெயின் ரோட்டில் தாசில்தார் லதா தலைமையில் மண்டல துணை தாசில்தார் பழனிவேல், வருவாய் ஆய்வர் கார்த்திபன், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அய்யம்பேட்டையில் இருந்து கண்டியூர் நோக்கி வந்த லாரியை மறித்து சோதனை செய்தபோது அந்த லாரியில் அரசு அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

உடனே லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த திருச்சி துவாக்குடி மலையை சேர்ந்த செல்வம் என்பவரை பிடித்து திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவையாறு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். #Sandrobbery

Tags:    

Similar News