செய்திகள்

கிருஷ்ணகிரியில் ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

Published On 2018-07-17 16:14 GMT   |   Update On 2018-07-17 16:14 GMT
கிருஷ்ணகிரியில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி சாந்தி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் அருணோதயம்(வயது 42). அரசு பள்ளி ஆசிரியர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு, கட்டிகானப்பள்ளியில் உள்ள தங்கை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். பிறகு அவர் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு, திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அருணோதயம் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று பதிவாகி இருந்த கைரேகைகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைகள்திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News