செய்திகள்

திருப்பூரில் வாக்கிங் சென்ற தலைமை ஆசிரியர் ரெயில் மோதி பலி

Published On 2018-07-15 14:35 GMT   |   Update On 2018-07-15 14:35 GMT
திருப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தலைமை ஆசிரியர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருப்பூர்:

திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 70) இவர் திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் திருப்பூர் ரெயில் நிலையம் பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். 

இதேபோல் சம்பவத்தன்று நடை பயிற்சிக்கு சென்ற அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஆண்டியப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடர் சிதறி பலியானார்.

தகவல் கிடைத்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் தலைமை ஆசிரியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News