செய்திகள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த காற்றுடன் மழை
வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மாலையில் இருந்து கன மழை பெய்து வருகிறது. #ChennaiRains
சென்னை:
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று மாலையில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் சில முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பஸ், ஆட்டோ, போன்ற பொது வாகனங்கள் இயக்கம் ஓரளவு தாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். #ChennaiRains
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று மாலையில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் சில முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பஸ், ஆட்டோ, போன்ற பொது வாகனங்கள் இயக்கம் ஓரளவு தாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். #ChennaiRains