செய்திகள்

கோவை அருகே கோவில் கதவை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு

Published On 2018-07-11 12:12 GMT   |   Update On 2018-07-11 12:12 GMT
கோவை அருகே கோவில் கதவை உடைத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி பிரிவில் பயனியர் நகர் உள்ளது. இங்கு வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றார். அதன் பின்னர் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த நடராஜர், சிவகாமி அம்மையார், விநாயகர் ஆகிய ஐம்பொன் சிலைகளை திருடி சென்று விட்டனர். திருட்டு போன சிலைகளின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவிலில் திருட்டு போன சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News