செய்திகள்

ராமநாதபுரம் அருகே மணல் திருடியதாக 6 பேர் கைது

Published On 2018-07-11 11:33 GMT   |   Update On 2018-07-11 11:33 GMT
மணல் திருடியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தூர் கிராமத்து ஓடையில் சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதாக பஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சிலர் டிப்பர் லாரிகள் வைத்து மணல் திருடுவது தெரியவந்தது. அங்கு நின்ற 3 டிப்பர் லாரிகள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்டதாக வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வன் (வயது (24), பாக்கியசீபன் (34), ரகுமத்துல்லா (29), காமராஜ் (40) கைது செய்யப்பட்டனர். ஜெயக்குமார், லட்சுமணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாடானை கற்காத்தகுடி ஓடையில் தோட்டமங்கலம் பகுதியில் மணல் எடுத்த கும்பலை, திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

அங்கிருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (36), பன்னீர்செல்வம் (28) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News