செய்திகள்

உப்பிலியபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2018-07-09 11:38 GMT   |   Update On 2018-07-09 11:38 GMT
உப்பிலியபுரம் பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்சாரம் விநியோகம் இருக்காது.

துறையூர்:

துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொப்பம்பட்டி, டி.ரெங்கநாதபுரம், டி.முருங்கப்பட்டி ஆகிய மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், சோபனபுரம், மாராடி, வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், பெருமாள்பாளையம், டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News