செய்திகள்
மருத்துவ கலந்தாய்வுக்கு வந்து சான்றிதழை தொலைத்த மாணவனுக்கு உதவ அரசு தயார்
மருத்துவ கலந்தய்வுக்கு வந்த போது சான்றிதழை தொலைத்த மாணவன் பூபதி ராஜா அரசை அனுகினால் உதவ தயாராக இருப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் நடக்கும் மருத்துவ கலந்தாய்வுக்கு வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகனாக பூபதி ராஜாவின் சான்றிதழ்கள் அனைத்தும் திருடு போயின. இதனால், அவர் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் போனது. இந்த செய்தியை ஊடகங்களில் பார்த்த ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் அரசு அவருக்கு உதவ வேண்டும் என அரசு வழக்கறிஞரிடம் கேட்டுகொண்டார்.
இது தொடர்பாக, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முனுசாமி நீதிபதி வைத்திய நாதனை இன்று சந்தித்து, பூபதி ராஜாவுக்கு மாற்று சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என்றும், மாணவன் அரசை அனுகும் பட்சத்தில் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.