கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்
பெருமாள்மலை:
கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளான பாச்சலூர், பெருங்காடு, பெரும்பாறை, பேத்துப்பாறை, அஞ்சு வீடு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காபி, வாழை, ஆரஞ்சு, பலா, அவரை உள்ளிட்ட மலை காய்கறிகள் விளைகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனை தொடர்ந்து நேற்று சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட அவரை பயிர்கள் மற்றும் வாழை மரங்களை காட்டுயானைகள் பெரிதும் சேதப்படுத்தி அழித்துவிட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்
மேலும் விவசாய நிலத்திற்குள் காட்டு யானைகள் அடிக்கடி வருவதால் மலை வாழ் விவசாய மக்கள் பெரிதும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு கொடைக்கானல் வனத்துறை விவசாய நிலத்திற்குள் காட்டுயானைகள் வரமால் இருக்க தடுப்பு சுவர் அமைத்து கொடுத்தால் அச்சமின்றி விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தமிழக அரசு உதவி தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர்