செய்திகள்

காங்கயம் அருகே ஆட்டோ மீது கார் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

Published On 2018-06-20 09:43 GMT   |   Update On 2018-06-20 09:43 GMT
காங்கயம் அருகே ஆட்டோ மீது கார் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம்- கோவை சாலையில் அமைந்துள்ள செட்டிப்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (44). அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.

நேற்று மாலை இவர் பல்லடத்திலிருந்து ஆட்டோவில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். சக்தி நகர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரன் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோ மீது மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. விபத்து குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News