செய்திகள்

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 40 லட்சம் மோசடி- கணவன்-மனைவி மீது வழக்கு

Published On 2018-06-19 07:52 GMT   |   Update On 2018-06-19 07:52 GMT
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், குசவன்குண்டு அருகே உள்ள குதிரைகுத்தியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அப்போது செங்கல்பட்டைச் சேர்ந்த சேகர் (58), அவரது மனைவி கிளாடி (50) ஆகியோர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டனர்.

தலைமை செயலகத்தில் வேலை பார்ப்பதாக கூறிய சேகர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தனக்கு முக்கியமான நபர்களை தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரூ. 40லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால் சேகர் வேலை எதுவும் வாங்கித்தரவில்லை.

பலமுறை பணம் கேட்டும் சேகர் மற்றும் கிளாடி தர மறுத்ததால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயக்குமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News