செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே மது விற்பனையை காட்டி கொடுத்த பெண் மீது தாக்குதல்

Published On 2018-06-18 11:38 GMT   |   Update On 2018-06-18 11:38 GMT
ஆண்டிப்பட்டி அருகே மது விற்பனையை காட்டி கொடுத்த பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு தங்கம்மாபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது45). இவர் அப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்தார். ஈஸ்வரியின் வீடு அருகே வசித்து வருபவர் கக்கன் மனைவி ராஜலட்சுமி (35).

சம்பவத்தன்று ராஜலட்சுமி தான் மது விற்பதை போலீசுக்கு காட்டி கொடுத்ததாக ஈஸ்வரி சந்தேகப்பட்டார். மேலும் இது குறித்து அவரிடம் தகராறு செய்து தாக்கி உள்ளார். தாக்குதல் குறித்து ராஜலட்சுமி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்தனர்.

Tags:    

Similar News