செய்திகள்

காலாப்பட்டில் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-06-18 10:27 GMT   |   Update On 2018-06-18 10:27 GMT
காலாப்பட்டில் செல்போனில் விளையாடி கொண்டு இருந்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை பெரியகாலாப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் பலராமன். இவர் திண்டுக்கல்லில் ஜே.சி.பி. எந்திர டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர் காலாப்பட்டில் ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் ஆகாஷ் (வயது16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சம்பவத்தன்று ஆகாஷ் செல்போனில் விளையாடி கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் ஆதிலட்சுமி கண்டித்தார். பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தாய் கண்டித்ததால் மனமுடைந்த ஆகாஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் கூரையில் தாயின் சேலையால் அவர் தூக்குபோட்டு தொங்கினார்.

வேலைமுடிந்து வீட்டுக்கு வந்த ஆதிலட்சுமி மகன் ஆகாஷ் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆகாஷை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், ஏட்டு வீரப்பன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News